×

வேங்கைவயல் விவகாரம் 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை: கோர்ட் அனுமதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை சிபிஐஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 21 பேரிடம் டிஎன்ஏ பரிதோதனை செய்ய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வேங்கைவயலைச் சேர்ந்த ஒரு சிறுவன் மற்றும் இறையூரைச் சேர்ந்த 3 சிறுவர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 4 சிறுவர்களுக்கும் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்யலாம் என்றும், பரிசோதனை செய்யும் தேதியை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் காவல்துறை, சிறுவர்களின் பெற்றோர்கள் சேர்ந்து முடிவு செய்யலாம் என நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தரவிட்டார்.

The post வேங்கைவயல் விவகாரம் 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை: கோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Bengali ,Pudukottai ,Pudukottai district ,Venkaivyal ,Adi Dravidar ,Dinakaran ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...