×

இடைப்பாடி அருகே காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்

இடைப்பாடி: மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர், பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிபட்டி, ஊராட்சிகோட்டை ஆகிய நீர்மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து திருச்சி, தஞ்சாவூர் வரை செல்கிறது. இந்நிலையில் நேற்று கோனேரிபட்டி நீர்மின் தேக்க பகுதிகளான, காவிரி நீர் செல்லும் சிலுவம்பாளையம், கோட்டமேடு, காட்டூர் வரை காவிரி ஆற்றில் ஆங்காங்கே மீன்கள் செத்து மிதந்தது.

இதனால் ஆற்றங்கரையில் குளிக்க வந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். யாராவது மீன் பிடிக்க தோட்டாக்கள் போட்டதால் மீன்கள் செத்ததா? அல்லது கரை ஓரங்களில் சாயக்கழிவுநீர் கலக்கப்பட்டதா என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இடைப்பாடி அருகே காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Fishes ,Caviri River ,Mattur Dam ,Checkanur ,Poolambatti ,Jangyapapatti ,Goneripatti ,Puratsikotta ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...