×

துறையூர் அருகே தகராறில் மாமியார் கையை வெட்டிய மருமகன் கைது

 

துறையூர், ஜூலை 17: துறையூர் அருகே தனது அனுமதியில்லாமல் மனைவியை அழைத்துச் சென்ற மாமியார் கையை வெட்டிய மருமகனை போலீசார் நேற்று கைது செய்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகா காட்டேரி பவானி எஸ்டேட்டைச் சேர்ந்த குமார் மனைவி அன்னக்கிளி (35). இவரது மகள் கல்பனாவை துறையூர் அருகேயுள்ள் சிறுநாவலூர் புதூர் மேலத்தெருவைச் சேர்ந்த இளங்கோ மகன் சூர்யா (23) காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இந்த நிலையில் தனது ஊரில் திருவிழா நடப்பதாக கூறி கல்பனாவை அழைத்துச் செல்வதற்காக அன்னக்கிளி சிறுநாவலூர் வந்தார்.

நேற்று அதிகாலை மகளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தபோது மருமகன் சூர்யா எனது அனுமதியில்லாமல் மனைவியை எப்படி அழைத்துச் செல்லலாம் என்று கூறி மாமியாரிடம் தகராறு செய்தார். அப்போது கத்தியால் மாமியாரின் கையை வெட்டியுள்ளார்.இதில் காயமடைந்த அன்னக்கிளி துறையூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான தகவலின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிந்து மாமியார் கையை வெட்டிய சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post துறையூர் அருகே தகராறில் மாமியார் கையை வெட்டிய மருமகன் கைது appeared first on Dinakaran.

Tags : Dariyur ,Dinakaran ,
× RELATED துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்த...