×

டூவீலரில் வந்தவர் நிலைதடுமாறி பலி

பேரையூர், ஜூலை 17: பேரையூர் பரதபாண்டியர் நகரைச் சேர்ந்தவர் அழகர். இவரது மகன் விஜயகுமார்(34). இவர் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் பேரையூர்- எம்.சுப்புலாபுரம் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியில் உள்ள சிலைமலைப்பட்டியைக் கடந்து பேரையூர் அருகே வந்தபோது., திடீரென சாலையின் குறுக்கே நாய்கள் ஓடியுள்ளன.

இதனால் அவர் நாய்கள் மீது வாகனம் மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். அப்போது நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த விஜயகுமாரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

The post டூவீலரில் வந்தவர் நிலைதடுமாறி பலி appeared first on Dinakaran.

Tags : Peraiyur ,Alaghar ,Bharatapandiyar ,Vijayakumar ,
× RELATED மலைக்கு புறப்பட்டார் அழகர்