×

புளியம்பாறை அரசு பள்ளிக்கு குடிநீர் தொட்டி வழங்கல்

 

கூடலூர், ஜூலை 17: புளியம்பாறை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், காமராஜரின் நினைவை போற்றும் வகையில், காமராஜர் கல்வி வளர்சி நாள் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தேவர்சோலா பேரூராட்சி தலைவர் செல்வி வள்ளி, ரோட்டரி புளூ மவுண்டன் தலைவர் டாக்டர் எல்ஜூ தாமஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்எல்ஏ பொன் ஜெயசீலன், ரோட்டரி சங்க பேச்சாளர் தன்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து, ரோட்டரி கிளப் ஆப் ப்ளூ மவுண்டன் சார்பில் பள்ளிக்கு தண்ணீர் தொட்டி வழங்கப்பட்டது. கல்வி வளர்ச்சி நாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல, ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் யோகேஸ்வரி தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில், தமிழ் ஆசிரியை பாலாமணி பள்ளி மேலாண்மை குழு தலைவர் மஞ்சுமுரளி, தமிழ் ஆசிரியை ஏன்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புளியம்பாறை அரசு பள்ளிக்கு குடிநீர் தொட்டி வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Puliyampara Government School ,Kudalur ,Puliyamparai Government High School ,Kamaraja ,Puliyamparai Government School ,
× RELATED கூடலூர்,பந்தலூர் வழியாக வரும்...