×

முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டம் மியான்மர், தாய்லாந்து அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் பேச்சு

பாங்காக்: முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டம் குறித்து மியான்மர்,தாய்லாந்து நாட்டின் அமைச்சர்களுடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுபயணம் செய்து வருகிறார். பாங்காக்கில் நேற்று நடந்த மேகாங்- கங்கா ஒத்துழைப்புக்கான திட்டம் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இதில், மனித மற்றும் போதை பொருள் கடத்தல் விவகாரங்களை பற்றி அவர் எழுப்பினார்.

இதுபற்றி டுவிட்டரில் அவர் பதிவிடுகையில், சமீப காலங்களில் சவால்களை சந்தித்த திட்டங்களின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டது. இந்தியா-மியான்மர்,தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை பற்றியும் வலியுறுத்தப்பட்டது. மியான்மரில் உள்ள சூழ்நிலையின் காரணமாக இந்த திட்டம் மிகவும் கடினமான திட்டமாக உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை விரைந்து முடிப்பது குறித்து மியான்மர்,தாய்லாந்து அமைச்சர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

The post முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டம் மியான்மர், தாய்லாந்து அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Jaisankar ,Myanmar ,Thailand ,Bangkok ,Foreign Minister ,Dinakaran ,
× RELATED வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்...