×

அரசு பஸ் மீது ஜேசிபி மோதல்: 15 பயணிகள் படுகாயம்

அவிநாசி,ஜூலை16: அவிநாசி அருகே கருவலூரில் அரசு பஸ் மீது ஜேசிபி வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.திருப்பூரில் இருந்து அரசு பேருந்து 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.அவிநாசி, கருவலூர் காளிபாளையம் அருகே சென்ற போது, எதிரே வேகமாக வந்த ஜேசிபி வாகனம் அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநர் உள்பட மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post அரசு பஸ் மீது ஜேசிபி மோதல்: 15 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : JCB ,Avinasi ,Karulur ,JCP ,Dinakaran ,
× RELATED பேருந்துகள் நிற்காமல் செல்வதை...