×

பாலசோர் ரயில் விபத்து 3 அதிகாரிகளுக்கு நீதிமன்ற காவல்

புவனேஷ்வர்: ஜூன் 2ம் தேதி ஒடிசாவின் பாலசோரில் நடந்த ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 293 பயணிகள் உயிரிழந்தனர். 1200 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் 3 பேர் 7ம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். இவர்களது காவல் முடிந்த நிலையில் நேற்று சிறப்பு நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை மேலும் 5 நாட்களுக்கு நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு 27ம் தேதி விசாரணைக்கு வருகின்றது.

The post பாலசோர் ரயில் விபத்து 3 அதிகாரிகளுக்கு நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Tags : Balasore ,train ,Bhubaneswar ,Odisha ,Balasore train accident ,Dinakaran ,
× RELATED சூப்பர்சோனிக் டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி