டேராடூன்: ஒன்றிய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அனைவரையும் சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல கவுன்சிலின் 15வது மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஒன்றிய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் உத்தரகாண்ட் சென்றார். அப்போது பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘‘ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில், ஆரம்ப நிலை சுகாதார பணியாளர்கள் உட்பட அனைவரையும் சேர்க்க வேண்டும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்ச்சியாக இந்த திட்டத்தை மறுஆய்வு செய்வதோடு, கண்காணிக்க வேண்டும் . ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மெகா சேர்க்கை இயக்கத்தை தொடங்குவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.
The post ஆயுஷ்மான் பாரத் திட்டம் மாநிலங்களுக்கு புதிய உத்தரவு : ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.