×

ஓபிஎஸ், டிடிவி, சசிகலா மன்னிப்பு கடிதத்தை ஏற்க மாட்டோம்: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை தவிர யார் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் அதிமுகவில் சேர்ப்போம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: கொடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்னை. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து வருகிற 20ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தக்காளி, இஞ்சியை கண்ணில் பார்க்க முடியவில்லை. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தை சேதப்படுத்தினர். ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா 3 பேரும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களை தவிர யார் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

The post ஓபிஎஸ், டிடிவி, சசிகலா மன்னிப்பு கடிதத்தை ஏற்க மாட்டோம்: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : OPS ,DTV ,Sasigala ,Jayakumar ,Chennai ,Atimukumar ,minister ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...