×

பாலியல் தொல்லை, ஆபாச பேச்சு விவகாரம்: விழுப்புரம் பாஜ தலைவரை நீக்க கோரி நிர்வாகிகள் தர்ணா.! அண்ணாமலை மீது கட்சியினர் அதிருப்தி

விழுப்புரம்: பாலியல் தொல்லை, ஆபாசமாக பேசிய விழுப்புரம் மாவட்ட பாஜ தலைவரை நீக்க கோரி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் தர்ணாவிஒ ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக கலிவரதன் செயல்பட்டு வருகிறார். ஏற்கனவே இவர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு, ஆபாசமாக பேசியதாக எஸ்பியிடத்தில் புகார் அளிக்கப்பட்டு, கட்சி மேலிடத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அண்ணாமலை கட்சியின் தலைவரா? என்று கலிவரதன் பேசிய ஆடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்நிலையில், கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததால், மாவட்ட தலைவர் கலிவரதனை கட்சியிலிருந்து நீக்க கோரி கடந்த வாரம் விழுப்புரம் கட்சி அலுவலகத்தில் பெண்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், கட்சி தலைமை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாநில தலைவர் அண்ணாமலை மீது விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ‘மாவட்ட தலைவர் கலிவரதனை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் கட்சியிலிருந்து விலகுவோம்’ என்று நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதனை நீக்கக்கோரி கட்சி அலுவலகம் முன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட வந்தனர். இதனை அறிந்த மாவட்ட தலைவர், முன்னதாக கட்சி அலுவலகத்தின் கதவுகளை இழுத்து மூடி சாவிகளை எடுத்துச் சென்றார்.

இருப்பினும், கட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து, ‘மாவட்ட தலைவர் கலிவரதனை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். இல்லை என்றால் விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்’ என கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி பாஜ என்று வெளியே மட்டும்தான் கூறுகிறார்கள். ஆனால், கட்சிக்குள் நடக்கும் பாலியல் தொந்தரவுகள் குறித்து ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதற்கு பல ஆடியோ, வீடியோக்களே சாட்சி. இந்த ஆடியோ, வீடியோக்கள் எல்லாம் இன்னும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாநில தலைமையிடம் முறையாக புகாரளித்தும் அண்ணாமலை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட தலைவர் கலிவரதனை நீக்கும் வரை நாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.

The post பாலியல் தொல்லை, ஆபாச பேச்சு விவகாரம்: விழுப்புரம் பாஜ தலைவரை நீக்க கோரி நிர்வாகிகள் தர்ணா.! அண்ணாமலை மீது கட்சியினர் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Baja ,anamalai ,Vilappuram district ,
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!