சென்னை: தேச ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது. அன்புமணி ராமதாஸ் 22-வது சட்ட ஆணையத்திடம் பா.ம.க. சார்பில் கருத்துகளை சமர்ப்பித்தார். பொது சிவில் சட்டம் என்ற பெயரில் எந்த ஒரு மதத்தினர் உரிமைகளும் பறிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொரு மதப் பிரிவினரின் பாரம்பரியத்துக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அப்படியே தொடர வேண்டும் என பா.ம.க தெரிவித்துள்ளது.
The post தேச ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: பாமக எதிர்ப்பு appeared first on Dinakaran.