×

திருப்பரங்குன்றம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.26 லட்சம்

திருப்பரங்குன்றம், ஜூலை 15: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஒரு மாத உண்டியல் காணிக்கை ரூ.26 லட்சம் என தெரியவந்துள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கை மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இதன்படி, இந்த பணிகள் நேற்று நடைபெற்றது. இதில் கோயில் துணை ஆணையர் சுரேஷ், அழகர்கோயில் துணை ஆணையர் ராமசாமி, மீனாட்சியம்மன் கோயில் தக்கார் பிரதிநிதி ஆறுமுகம்,

கண்காணிபாளர்கள் சுமதி, ரஞ்சனி, சத்யசீலன், ஆய்வர் இளவரசி உள்ளிட்ட அலுவலர்கள், கோயில் ஊழியர்கள், வேத பாடசாலை மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இந்த பணிகள் நேற்று காலை தொடங்கி மாலை வரை நீடித்தது. இதன் முடிவில், உண்டில்களில் 26 லட்சத்து 79 ஆயிரத்து 122 ரூபாய், 183 கிராம் தங்கம் 1 கிலோ 940 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

The post திருப்பரங்குன்றம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.26 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Tirupparankundam ,Subramanian Subramiya ,
× RELATED மதுரை மாநகராட்சி, மதுரை கிழக்கு,...