×

கல்லூரி மாணவி மாயம்

 

கோவை, ஜூலை 15: கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் பிரிவை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர், தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி பேஷன் டெக்னாலஜி 3ம் ஆண்டு படித்து வந்தார். மாணவி, தினசரி வீட்டில் இருந்து கல்லூரி வாகனத்தில் கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.

ஆனால், அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாணவி செல்போன் மூலமாக தனது தாயை தொடர்பு கொண்டார். அப்போது, அவர் தான் தனக்கு பிடித்தமான நபரை திருமணம் செய்து கொள்ளப்போகிறேன். இதற்காக ராமேஸ்வரம் சென்று கொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் வடவள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Coimbatore ,Navavur ,Vadavalli, Coimbatore ,Dinakaran ,
× RELATED பிரபல டிவி சீரியல் நடிகர் மாயம்