×

பெரமியம் ஊராட்சியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி குடிநீர் விநியோகத்தை இல.பத்மநாபன் துவக்கி வைத்தார்

 

தாராபுரம், ஜூலை15: தாராபுரத்தை அடுத்த பெரமியம் ஊராட்சியில் உள்ள அம்மன் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர் இந்நிலையில் மூலனூர் துணை ஒன்றிய செயலாளர் முத்துலட்சுமி தங்கராஜ், தனது சொந்த செலவில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியை கட்டினார்.அதன் துவக்க விழா மற்றும் சாலையோர பூங்கா அமைக்கும் பணிக்காக மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி மன்ற 4வது மண்டல குழு தலைவரும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான இல.பத்மநாபன் விழாவுக்கு தலைமை வகித்து புதிய குடிநீர் தொட்டியில் விநியோகத்தை துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.நிகழ்ச்சிகளில் மூலனூர் ஒன்றிய துணைச் செயலாளர் முத்துலட்சுமி தங்கராஜ்,மூலனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு,மூலனூர் பேரூராட்சி தலைவர் மக்கள் தண்டபாணி,பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி,பெரமியம் ஊராட்சி துணைத் தலைவர் புகழேந்தி, ஒன்றிய விவசாய அணி தலைவர் ரங்கசாமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரமியம் ஊராட்சியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி குடிநீர் விநியோகத்தை இல.பத்மநாபன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Lt. Padmanabhan ,Peramiyam panchayat ,Tarapuram ,Amman Nagar ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது