×

வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் பெண் உட்பட 4 புரோக்கர்கள் கைது

 

திருப்பூர், ஜூலை15: ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் ஹவுசிங்யூனிட் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் 3 பெண்கள், 3 வாலிபர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண் மற்றும் 3 வாலிபர்கள் விபசார புரோக்கர்களாக செயல்பட்டதும், மற்ற 2 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து விபச்சார புரோக்கர்களான சேலம் மாவட்டம் கெங்கவள்ளி தாலுகா காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சத்யா என்கின்ற சேர்மகனி (31), ஊத்துக்குளி ஹவுசிங் யூனிட் டாலர்சிட்டி பகுதியைச் சேர்ந்த குமார் என்கின்ற செந்தில் குமார் (41), நாகப்பட்டினம் பிரிஞ்சி மூளை லெனின் தெருபகுதியைச் சேர்ந்த அகிலன் (23), அதே பகுதியைச் சேர்ந்த விஸ்வந்த் (23) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் உட்பட 4 பேரையும் கைது செய்தனர். அங்கிருந்து மீட்ட 2 பெண்கள் கோவை பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

The post வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் பெண் உட்பட 4 புரோக்கர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Citco Mudalipalayam ,Uthikuli ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...