×

தாம்பரம் சானடோரியம் பகுதியில் தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்

தாம்பரம்: தாம்பரம் சானடோரியம் பகுதியில் தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. தாம்பரம் சானடோரியம் பகுதியில் மாநில தீயணைப்பு துறை பயிற்சி மையம் உள்ளது. இம்மையத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலர், நிலைய அலுவலர், தீயணைப்பு வீரர்களுக்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு மாவட்ட அலுவலர் மற்றும் 120 தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. இதில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் ஆபாஷ்குமார் கலந்துகொண்டு, தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.

அப்போது, தீயணைப்பு வீரர்களுக்கு உடல் வலிமையை அதிகரிக்கும் பயிற்சி, தீ விபத்து ஏற்படும் விதம், தீயை அணைக்கும் விதம் என பல தரப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும், பயிற்சி முடித்த பின் சான்றிதழ் வழங்கப்பட்டு தீயணைப்பு மையங்களுக்கு அனுப்பப்படுவர் என்றார். இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கூடுதல் இயக்குனர் விஜயசேகர், மாநில பயிற்சி மையத்தின் இணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தாம்பரம் சானடோரியம் பகுதியில் தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tambaram sanatorium ,Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...