×

கடன் பிரச்னையால் விபரீதம் தம்பதி தற்கொலை: தாம்பரம் அருகே சோகம்

தாம்பரம்: சிட்லப்பாக்கம் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ் (48). இவருக்கு, ஜான்சிராணி (45) என்ற மனைவியும், அபினேஷ் (18) என்ற மகனும், அனுசம்பிகா (13) என்ற மகளும் உள்ளனர். பொன்னுதாஸ், திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோ மொபைல் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஜான்சிராணி, குன்றத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன் அபினேஷ் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மகள் அனுசம்பிகா தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பொன்னுதாஸ், ஆட்டோமொபைல் கடையை விரிவுபடுத்துவதற்காக, வங்கி மற்றும் தனக்கு தெரிந்த பலரிடம் ரூ.1 கோடி வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஆட்டோ மொபைல் கடையில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இதனால், கடன் கொடுத்தவர்கள் தங்களது பணத்தை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால், மன உளைச்சலுக்குள்ளான கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் மகன் மற்றும் மகள் இல்லாத நேரத்தில் வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து மாலையில் வீடு திரும்பிய மகன் மற்றும் மகள் பெற்றோர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிட்லபாக்கம் போலீசார், பொன்னுதாஸ், ஜான்சிராணி ஆகிய இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடன் பிரச்னையால் விபரீதம் தம்பதி தற்கொலை: தாம்பரம் அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Ponnudas ,Kalyanasundaram Street, Chitlapakkam ,Jhanshirani ,Abinesh ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...