×

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பெண் குழந்தையின் இடது கை முறிவு: உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே கொடூர் பகுதியை சேர்ந்தவர் துரை (30). இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயஸ்ரீ (28). கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஜெயஸ்ரீ கர்ப்பமானார். இவர், கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், ஜெயஸ்ரீக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, ஜெயஸ்ரீக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பிரசவத்தின்போது குழந்தையின் இடது கை முறிந்து காணப்பட்டதாகவும், வலது கை செயலிழந்த நிலையில் காணப்படுவதாகவும், மூன்று நாட்களாக தொடர்ந்து தலையில் இருந்து ரத்தம் வெளியேறி வருவதாக மருத்துவர்களிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால், மருத்துவர்கள் தரப்பில் சரியான பதில் ஏதும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஜெயஸ்ரீயின் உறவினர்கள் நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அறைக்கு வந்தனர். ஆனால், அங்கு முதல்வர் இல்லாததால் மருத்துவமனை நிலைய அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தவறு செய்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, அவரிடம் புகார் அளித்தனர். இதனால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பெண் குழந்தையின் இடது கை முறிவு: உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Govt Hospital ,Chengalpattu ,Durai ,Kauraik ,Seiyur, Chengalpattu district ,Chengalpattu Government Hospital ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!