×

ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

செய்யூர்: செய்யூர் அடுத்த திருவாதூர் ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் திருவாதூர் ஊராட்சியில் பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் நாளடைவில் பழுதானதால், புதிய அலுவலக கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் அப்பகுதியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

கட்டிட பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் பாரதிபாபு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், லத்தூர் ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் கனகவல்லி ஜானகிராமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Pavilion ,Tiruvadur ,Thiruvadur ,Pavilion forum ,
× RELATED காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு