×

நெம்மேலி குப்பத்தில் கடல் சீற்றம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையொட்டி நெம்மேலி குப்பம் உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்கள், மீன்பிடி தொழிலையே நம்பி பிழைப்பு நடத்துகின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் குப்பத்தில் கடந்த சில தினங்களாக பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு, கடல் பல மீட்டர் தூரத்திற்கு முன்னோக்கி வந்து அரித்ததால் அங்குள்ள சிமென்ட் சாலையின் ஒரு பகுதி 2 நாட்களுக்கு முன்பு சேதமானது.

இதனால், அப்பகுதி மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். நெம்மேலி மீனவர் குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க கடந்த மீன்வள மானியக் கோரிக்கையில் ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. எனவே, கடல் அரிப்பை தடுக்கும் வகையிலும், மீனவ மக்களை பாதுகாக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை அரசு விரைந்து தொடங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நெம்மேலி குப்பத்தில் கடல் சீற்றம் appeared first on Dinakaran.

Tags : Nemmely ,Mamallapuram ,Nemmali Kubbam ,Chennai ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...