×

பைக் திருட முயன்ற வாலிபர் சிக்கினார்

ஆவடி: ஆவடி அடுத்த அண்ணனுர் ரயில்வே கேட் அருகே, நேற்று மாலை வாலிபர் ஒருவர் அங்கு நிறுத்தி வைத்திருந்த பைக்கை திருட முயன்றுள்ளார். அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். புகாரின்பேரில், திருமுல்லைவாயில் போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், அம்பத்தூர் அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்த ஸ்டிக்கர் கடையில் பணியாற்றும் கௌரி சங்கர்(22) என தெரிந்தது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்குகள் இவர் மீது இருப்பது தெரிய வந்தது. இதனை தொடந்து, அவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பைக் திருட முயன்ற வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Annanur ,Dinakaran ,
× RELATED 195 கிலோ கஞ்சா அழிப்பு