×

கஞ்சா சாக்லேட் கடத்தி வந்த வடமாநில இளைஞர் கைது

புழல்: செங்குன்றம், சோழவரம், மீஞ்சூர், மணலி, எண்ணூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா, அபின் ஆகியவை அதிகளவில் நடமாட்டம் இருப்பதாக செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில், நேற்று காலை செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் பையுடன் சுற்றி திரிந்ததை பார்த்து பிடித்து அவரிடமிருந்த பையை சோதனை செய்தனர்.

அதில் 3 கிலோ கஞ்சா, 3 கிலோ கஞ்சா சாக்லேட் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அக்ரி ஜி சபா(19) என்பதும், பீகார் மாநிலத்தில் இருந்து கடத்தி வந்து ஈரோட்டில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய வந்ததும் தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை அவரை கைது செய்தனர்.

The post கஞ்சா சாக்லேட் கடத்தி வந்த வடமாநில இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : North State ,Chenkundam ,Cholhavaram ,Meenchur ,Manali ,Niloor ,State ,
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...