×

பொதட்டூர்பேட்டையில் மைனர் பெண் பலாத்காரம்: போக்சோவில் தொழிலாளி கைது

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை காலனியைச் சேர்ந்த 16 வயதான மைனர் பெண்ணை காணவில்லை என்று பொதடூர்பேட்டை காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் செய்தார். உதவி காவல் ஆய்வாளர் சிவாவழக்கு பதிவு செய்து தேடினர். இதுதொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவங்காடு சேர்ந்த கார்த்திக்(40) என்பவரை பிடித்து அவரிடம் இருந்து மைனர் பெண்ணை மீட்டனர்.

போலீசார் கார்த்திக்கை காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் கோயில் சீரமைப்பு பணிகள் செய்து வந்த கார்த்திக், பொதட்டூர் பேட்டையை சேர்ந்த 16 வயது பெண்ணிடம் நயமாகப்பேசி நம்ப வைத்து தனியாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பொதட்டூர்பேட்டையில் மைனர் பெண் பலாத்காரம்: போக்சோவில் தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Pothatturpet ,POCSO ,Pallipattu ,Thiruvallur district ,Boxoville ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை