×

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தயாளன்(40) சரண்யா(35) தம்பதி. இவர்களுக்கு தர்ஷினி(16) என்ற மகளும், கமலேஷ் (13) என்ற மகனும் உள்ளனர். இவர்கள், வழக்கம்போல், நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டி விட்டு இவர்களின் பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல அதனை தொடர்ந்து, தம்பதிகள் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில், அன்று மாலை பள்ளி முடிந்து திரும்பிய தர்ஷினி மற்றும் கமலேஷ் வீட்டிக் கதவின் தாழ்ப்பாழ் மற்றும் உள்ளே இருந்த பீரோவின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த பிள்ளைகள், இது சம்பந்தமாக பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை செய்தனர். இதில், வீட்டின் பின்புறம் உள்ள சுவற்றின் வழியாக ஏறிய மர்ம ஆசாமிகள் மொட்டை மாடியின் மூலம் படியிறங்கி வீட்டின் முன் இரும்பு கதவை உடைக்காமல், வீட்டின் தாழ்ப்பாழை உடைத்து உள்ளே சென்றது தெரிய வந்தது. இதில், பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.23 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Dayalan ,Saranya ,Redtampedu ,Darshini ,Kamlesh ,
× RELATED இரண்டாம் கட்டமாக இலங்கை மறுவாழ்வு...