×

நாய்கள் கடித்து மான் பலி

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே எஸ்விஜி புரம் கடிகாச்சலம் காட்டில் ஏராளமான மான்கள் உள்ளன. வனவிலங்குகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்துவதில் வனத்துறையினர் காட்டும் அலட்சியத்தால் மான்கள் சாலைகளுக்கு வரும்போது தெரு நாய்கள் கடித்தும், கிணற்றில் விழுந்தும் இறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த 6 மாதங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மான்கள் இறந்துள்ளன.

திருத்தணி ஆர்.கே.பேட்டை மாநில நெடுஞ்சாலை எஸ்விஜி புரம் அருகில் சாலை பகுதியில் இருந்த புள்ளிமானை நேற்று தெருநாய்கள் கடித்ததில் இறந்துள்ளது. மான் இறந்துகிடப்பதை பார்த்த கிராம மக்கள் திருத்தணி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். குறிப்பாக மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள கடிகாச்சலம் காட்டில் வனவிலங்குகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் இரும்புவேலி அமைக்க வேண்டும் என்றும் தண்ணீர் தொட்டிகள் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் பலமுறை வனத்துறையினருக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கிராமமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

The post நாய்கள் கடித்து மான் பலி appeared first on Dinakaran.

Tags : PALLIPATTA ,RK Pettah ,Dinakaran ,
× RELATED சசிகலா அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கவுன்சிலர்கள்