×

தமிழ்நாடு பதிவுத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்த அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு பதிவுத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்த அரசாணை வெளியிடபட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞர் அவர்களால் பதிவுத்துறையில் முன்னோடித் திட்டமாக 06.02.2000 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்டார்’ திட்டம் தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் அடைந்து கணினிமயமாக்கலில் பதிவுத்துறையை ஒரு முன்னோடியாகத் திகழ வைத்துள்ளது. பதிவுத்துறையில் வழங்கப்பட்டு வரும் அனைத்து சேவைகளும் இணையதள அமைப்பிலான ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

பதிவுத்துறையின் கணினிமயமாக்கல் முதலமைச்சரின் உத்திரவின்படி, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதனடிப்படையில் தற்போதுள்ள ‘ஸ்டார் 2.0’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின் லேர்னிங், பெருந்தரவு பகுப்பாய்வு முதலான மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப உத்திகளை உட்புகுத்துதல், சான்றிட்ட நகல் மற்றும் வில்லங்க சான்று முதலான சேவைகளை தானியங்கி முறையில் தன்னிச்சையாக தயாரித்தல் முதலான பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாக ரூ.323.45 கோடி செலவில் ‘ஸ்டார் 3.0’ திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட 12.07.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை கண்காணிப்பதற்காக தலைமை செயலாளரின் தலைமையிலான பதிவுத்துறை மாநில தலைவர் அளவிலான குழுவும், செயல்படுத்துவதற்காக தலைமையிலான திட்ட செயலாக்க குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கென திட்ட ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுக்கவும், திட்ட ஆலோசகர்கள் இருவரை நியமிக்கவும், இத்திட்டத்தின் செயல்திறன், செயல்பாடு மற்றும் பாதுகாப்பு முதலானவற்றைத் தணிக்கை செய்ய மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்களை அடையாளம் காணவும் பதிவுத்துறை தலைவருக்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது,

முழுமையான வன்பொருள், மென்பொருள், பணியமைப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘ஸ்டார் 3.0’ திட்டமானது பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு எளிய, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் துரிதமான மற்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உயர்தரத்திலான சேவைகளை
வழங்கும் என எதிர்பார்க்கபடுகிறது என கூறபட்டுள்ளது.

The post தமிழ்நாடு பதிவுத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்த அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக...