×

விளாத்திகுளம் அருகே விபத்தில் 2 பேர் பலி; கல்லூரி மாணவர் மூளைச்சாவு அடைந்ததால் பெற்றோர் கதறல்

விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் சண்முகராஜ் (42). பெயிண்டர். இவரும், இதே பகுதியை சேர்ந்த சண்முகம் (55) என்பவரும், நேற்று முன்தினம் இரவு பைக்கில் விளாத்திகுளத்தில் இருந்து அரியநாயகிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இதேபோல் வேம்பார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களான கோவில்பட்டி ஸ்டாலின் காலனியை சேர்ந்த குமார் மகன் மதன்குமார் (21), வேம்பாரை அடுத்த கன்னிராஜபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சுடலைமணி (20) ஆகியோர் கல்லூரி முடிந்து கோவில்பட்டி நோக்கி பைக்கில் புறப்பட்டனர்.

விளாத்திகுளம் – வேம்பார் சாலையில் செவ்வலூரணி அருகே வரும்போது சண்முகராஜ் ஓட்டி வந்த பைக்கும், மதன்குமார் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் சண்முகராஜ், சுடலைமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சண்முகம், மதன்குமார் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மதன்குமார், மூளைச்சாவு அடைந்தார். சண்முகத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மூளைச்சாவு அடைந்ததால் மதன்குமாரின் பெற்றோர் கதறி அழுதனர். இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விளாத்திகுளம் அருகே விபத்தில் 2 பேர் பலி; கல்லூரி மாணவர் மூளைச்சாவு அடைந்ததால் பெற்றோர் கதறல் appeared first on Dinakaran.

Tags : Vlathigulam ,Vladikulam ,Salamuguraj ,Arianayagipuram ,Vlathigulam, Thuthukudi district ,
× RELATED தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்...