×

ஜி20 மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் நேரில் அழைப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒன்றிய தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் சந்திப்பு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக பூபேந்திர யாதவ் சந்தித்தார்.

இந்தியா தலைமையிலான ஜி20 மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் இந்தாண்டு தலைவராக இந்தியா உள்ளது.

இந்த கூட்டமைப்பு மூலம் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர வளர்ச்சி, ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இதற்கான ஜி20 உச்சி மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் 20 நாட்டு முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். வரும் செப்டம்பர் மாதம் டெல்லியில் இந்த ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று அழைத்துள்ளார் ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ். இந்த சந்திப்பானது சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. அப்போதுதான் மத்திய அமைகச்சர் முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

 

The post ஜி20 மாநாட்டில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் நேரில் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : CM ,G20 ,G.K. ,Union Minister ,Bupendra Yadav ,Stalin ,Chennai ,Chief Minister ,Union Labour ,Environment Minister ,
× RELATED பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு