×

திண்டுக்கல்லில் மதிமுக மாவட்ட செயலாளர் தந்தை படத்திற்கு வைகோ மரியாதை

திண்டுக்கல் ஜூலை 14: திண்டுக்கல் மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவனின் தந்தை நாராயணசாமி வயது முதிர்வின் காரணமாக கடந்த ஜூலை 5ம் தேதி காலமானார். இந்நிலையில் பொது செயலாளர் வைகோ நேற்று திண்டுக்கல் வாழைக்காய்பட்டி சமாதான நகரில் உள்ள செல்வராகவன் இல்லத்திற்கு நேரில் சென்று, நாராயணசாமி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வில் எம்எல்ஏ பூமிநாதன், நகர செயலாளர் செல்வேந்திரன், தீர்மானக்குழு உறுப்பினர் ராமசாமி, திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட அவை தலைவர் சுதர்சன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகர், மாநில விவசாய அணி துணை செயலாளர் தியாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர் காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் மதிமுக மாவட்ட செயலாளர் தந்தை படத்திற்கு வைகோ மரியாதை appeared first on Dinakaran.

Tags : Madhyamik District ,Vaiko ,Dindigul ,Madhyamuk ,Selvaragavan ,Narayanasamy ,
× RELATED வைகோ மீதான வழக்கு 4 மாதத்தில் முடிக்க ஐகோர்ட் உத்தரவு