×

இளம்பெண், 2 சிறுமி மாயம்

 

ஏழாயிரம்பண்ணை, ஜூலை 14: விருதுநகர், வெம்பக்கோட்டையில் காணாமல்போன 2 சிறுமிகள், இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் பயர் ஆபீஸில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வருகின்றனர்.

இதேபோல் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர். விருதுநகரை சேர்ந்த 14 வயது சிறுமி வேலை தேடி விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை. இது குறித்து ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

The post இளம்பெண், 2 சிறுமி மாயம் appeared first on Dinakaran.

Tags : mayam ,Ejayarampannai ,Vembakottai, Virudhunagar ,Vembakkottai ,
× RELATED வல்லம்பட்டி பகுதியில் புதர்மண்டி...