×

புத்தக திருவிழாவிற்கு ஐஓபி ரூ.2.50 லட்சம் நன்கொடை கலெக்டரிடம் வழங்கல்

 

தஞ்சாவூர், ஜூலை 14: தஞ்சாவூர் மாநகரில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பாக ரூ.2.50 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இதனை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் நாகேஸ்வரராவ் வழங்கினார். அதனை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் வளர்ச்சி காந்த், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், பொது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் நாயர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மாவட்ட கலெக்டர் அலுவலக கிளை மேலாளர் முத்துக்குமார் மற்றும் வங்கி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post புத்தக திருவிழாவிற்கு ஐஓபி ரூ.2.50 லட்சம் நன்கொடை கலெக்டரிடம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Indian Overseas ,IOP ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...