×

ஏனம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?..மக்கள் எதிர்பார்ப்பு

ஊத்துக்கோட்டை: ஏனம்பாக்கம் கிராமத்தில் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், ஏனம்பாக்கம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை ஊராட்சி அலுவலகம் சென்றுதான் கட்ட வேண்டும்.

ஆனால், இந்த ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. இதனால் கட்டிடம் கடந்த 15 வருடங்களாக சேதமடைந்து மழை காலங்களில் மழைநீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள் நனைந்து வீணாகின. கட்டிடமும் இடிந்து விழும் நிலையில் பழுதடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, ஏனம்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள இ-சேவை மைய கட்டிடத்தில்தான் தற்போது இயங்கி வருகிறது. எனவே பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏனம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?..மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Enambakkam ,Oothukottai ,Enambakkam village ,
× RELATED பிரானூர் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை