×

விஷசாராயம் அருந்தி உயிரிழந்த வழக்கில் 2 பேருக்கு குண்டாஸ்

செங்கல்பட்டு: விஷசாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்த வழக்கில், 2 பேர் குண்டாசில் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மே மாதம் விஷ சாராயம் அருந்தி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி மகேஸ்வரி நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், மொத்தம் 6 வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, விஷ சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருக்கந்தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை (40) மற்றும் பனையூரை சேர்ந்த ராஜேஷ் (27) ஆகியோரை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத்திடம் பரிந்துரைத்தார். அதன்பேரில், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார். இதையடுத்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post விஷசாராயம் அருந்தி உயிரிழந்த வழக்கில் 2 பேருக்கு குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Kundasil ,Chittamur, Chengalpattu District ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம...