- செந்தாமரை கண்ணன்
- வாரியம்
- அறங்காவலர்கள்
- குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
- பூந்தமல்லி
- குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
- செந்தாமரைக்கண்ணன்
- அறங்காவலர் குழு
- குன்ரதூர்
- குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு
பூந்தமல்லி: குன்றத்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில், அறங்காவலர் குழு தலைவராக செந்தாமரைகண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்த கோயிலுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் இந்த கோயிலுக்கு 5 அறங்காவலர்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது இந்நிலையில், அறிவிக்கப்பட்ட கோயில் அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தலை காஞ்சிபுரம் மாவட்ட இந்து சமய அறநிலையைத்துறை உதவி கமிஷனர் லட்சுமிகாந்த பாரதிதாசன் கோயில் வளாகத்தில் நடத்தி வைத்தார்.
இதில், சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழு தலைவராக செந்தாமரைகண்ணன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் சரவணன், குணசேகர், சங்கீதா, ஜெயக்குமார் ஆகியோர் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட ஐந்து உறுப்பினர்களும் கோயில் கருவறையில் சாமி முன்பு நின்று, அறங்காவலர்களாக தேர்வு செய்யப்பட்ட அனைவரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்றும், கோயிலுக்கு வேண்டிய அனைத்து பணிகளையும் முழுமனதோடு நாங்கள் செய்வோம் என கோயில் கருவறை முன்பு உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
மேலும், புதிதாக அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட செந்தாமரை கண்ணன் தற்போது இந்த கோயிலுக்கு வெள்ளி மயில் வாகனமும், ஆண்டு தோறும் சூரசம்ஹாரம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். புதிதாக அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் கோயில் நிர்வாகிகளும், பணியாளர்களும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
The post குன்றத்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவராக செந்தாமரை கண்ணன் தேர்வு appeared first on Dinakaran.