×

காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் காஸ் எடை போட்ட பின்னரே விநியோகம் செய்திட வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் நடந்த காஸ் நுகர்வோர் குறதைீர் கூட்டத்தில், காஸ் எடை போட்ட பின்னரே நுகர்வோருக்கு விநியோகம் செய்திட வேண்டும் என தீர்மானங்கள் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வட்டாட்சியர் ஞானவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஜெயராமன், உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் செல்வகுமார், நீதிமொழி முகவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார்.

கூட்டத்தில், காஸ்சுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலினை காஸ் விநியோகிக்கும் வாகனங்களில் அச்சிட வேண்டும். உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திட வேண்டும். காஸ் எடை போட்டபின் நுகர்வோருக்கு விநியோகம் செய்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், வாரம் ஒருமுறை கிராமப்புறங்களில் நடைபெறும் எரிவாயு விழிப்புணர்வு கூட்டங்களில் அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள வேண்டும் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், எரிவாயு நுகர்வோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் காஸ் எடை போட்ட பின்னரே விநியோகம் செய்திட வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Uttramerur ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...