×

செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பப்பதிவு முகாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நடக்க உள்ளன என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள் நாள் மற்றும் விபரம் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்பொருட்டு அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. அதன் விபரம்.

வட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை யினை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், வட்டாட்சியர் அலுவலகம், செங்கல்பட்டு 044-2742 6702, வட்டாட்சியர் அலுவலகம், மதுராந்தகம் 044-2755 2445, வட்டாட்சியர் அலுவலகம் செய்யூர் 044-2753 1144, வட்டாட்சியர் அலுவலகம் திருக்கழுக்குன்றம் 044-2744 7494, வட்டாட்சியர் அலுவலகம், திருப்போரூர் 044-2744 5072, வட்டாட்சியர் அலுவலகம் பல்லாவரம் 044-2238 2230, வட்டாட்சியர் அலுவலகம் வண்டலூர் 044-2953 5507, வட்டாட்சியர் அலுவலகம் தாம்பரம் 044-2238 2210 மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 044-2742 7412, 044-2742 7414, வாட்ஸ்-அப் எண் – 94442 72345

மேலும், பொதுமக்களிடமிருந்து வருகின்ற புகார்களை உடனுக்குடன் கண்காணித்து அவற்றை தொடர்புடைய துறைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொண்டு நிவர்த்தி செய்ய மாவட்ட கட்டுப்பாட்டு அறை – கலெக்டர் அலுவலகத்திலும் மற்றும் வட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை – வட்டாட்சியர் அலுவலகத்திலும் இயங்கி வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் திருவிழா மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் திருவிழா 21.7.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அரசாணை செங்கல்பட்டு மாவட்ட பொது (பல்வகை) துறை நாள் 3.9.2009ன் படி, கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, 21.7.2023 (வெள்ளிக்கிழமை) அன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்திட, அடுத்த மாதம் 5ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விண்ணப்பப்பதிவு முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Franchandise ,Chengalpattu District ,Chengalpattu ,Chengalbatu District ,Collector ,Rakulnath ,District ,Women's Rights Scheme Application Camp ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!