×

திருச்சியில் முதியவர் மாயம்

திருச்சி, ஜூலை 14: திருச்சியில் மாயமான முதியவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (50). இவரது சகோதரர் ராஜ்குமார்(52). திருமணம் ஆகாத ராஜ்குமார் தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், 22.6.2023 அன்று இரவு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலுக்கு செல்வதாக கூறி சென்ற ராஜ்குமார் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மகேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் எ.புதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சியில் முதியவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : trichy ,Trichy Edamalaipatti ,Pudur Pillaiyar Temple Street ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...