×

இரண்டாவது திருமணம் செய்ய வழுக்கை தலையை மறைத்து விக் வைத்த மாப்பிள்ளை: பெண் வீட்டார் வெளுத்து கட்டினர்

பாட்னா: பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அங்குள்ள டோபி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஜவுரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போதுமாப்பிள்ளை தலைக்கவசம் அணிய முயன்ற போது அவர் விக் வைத்து வழுக்கையை மறைத்து திருமணம் செய்ய முயன்றது அம்பலமானது. இதை கண்ட மணமகள் குடும்பத்தினர் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்தனர்.

அவர்கள் மணமகனை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினர். மேலும் அந்த மணமகன் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததும் தெரியவந்தது. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மணமகளின் குடும்பத்தினர் தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவுகிறது.

The post இரண்டாவது திருமணம் செய்ய வழுக்கை தலையை மறைத்து விக் வைத்த மாப்பிள்ளை: பெண் வீட்டார் வெளுத்து கட்டினர் appeared first on Dinakaran.

Tags : Patna ,Iqbalpur ,Gaya district ,Bihar ,Dobi police station ,
× RELATED பாட்னா சாஹிப் குருத்வாரா: தன் கையால்...