×

வள்ளியூர் அருகே ரயில் முன் பாய்ந்து ஓட்டல் உரிமையாளர் தற்கொலை

நாகர்கோவில், ஜூலை 14: வள்ளியூர் அருகே ரயில் முன் பாய்ந்து ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் கணேசன் (54). இவர் ஏர்வாடியில் ஓட்டல் நடத்தி வந்தார். இந்நிலையில் வள்ளியூர் அருகே ரயில் மோதி கணேசன் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வள்ளியூர் அருகே ரயில் முன் பாய்ந்து ஓட்டல் உரிமையாளர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Valliyur ,Nagercoil ,Nellai district ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...