- பாலிவுட்
- பூஜா பட்
- ஆதி
- திராவிட
- சென்னை
- கோத்தகிரி ஜகதலா
- நீலகிரி மாவட்டம்
- மு. குப்பன்
- நீலகிரி
- ஆதி திராவிடன்
- தின மலர்
சென்னை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஜெகதாலா கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் கடந்த 1978ம் ஆண்டு எம்.குப்பன் என்பவருக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிலம் ஆதி திராவிடர்களுக்கு மட்டும் உரியது, வேறு பிரிவினருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று கலெக்டர் நிபந்தனை விதித்தார். வேறு நபருக்கு மாற்றம் செய்ய வேண்டுமென்றால் கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. நிலம் யாருக்கு ஒதுக்க்பபட்டதோ அவர், அவரது குடும்பத்தினர் மட்டும் இந்த நிலத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சுப்பிரமணி என்பவருக்கு இந்த நிலத்திற்கான அதிகாரத்தை குப்பன் வழங்கியதாக கறப்படுகிறது. இதையடுத்து, சுப்பிரமணி இந்த நிலத்தை ராமசாமி என்பவருக்கு விற்பனை செய்துல்ளார். இதேபோல் இந்த நிலம் 3 பேர் கைமாறியுள்ளது. இந்த நிலையில், கடந்த 1990ல் இந்த நிலத்தை பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மூத்த மகள் நடிகை பூஜா பட் வாங்கியுள்ளார். இந்த நிலையில், ஆதி திராவிடர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தை பாலிவுட் நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும் அந்த நிலம் அரசுக்கு மீண்டும் திரும்ப தர வேண்டும் என்றும் கோத்தரி தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு வக்கீல் அரசு சி.ஜெயப்பிரகாஷ் ஆஜராகி, ஆதி திராவிடர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் சட்ட விரோதமாக வேறு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த நிலத்தை அரசு மீண்டும் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டு கோத்தகிரி தாசில்தாரின் பதில் மனுவை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஆதி திராவிடர் வகுப்பினருக்காக வழங்கிய நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியதை ரத்து செய்து கோத்தகிரி தாசில்தார் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
The post ஆதி திராவிடர் பிரிவினருக்கு வழங்கப்பட்ட நிலத்தை பாலிவுட் நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.