×

ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு

சென்னை: சென்னையில் உள்ள அறிவியல் நகரம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அறிவியல் நகரம் 2018-2019ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் ‘ஊரக கண்டுபிடிப்பாளர் விருது’ வழங்கி வருகிறது. இந்த விருது ஊரக புற மக்களின் அறிவுத் திறனை ஊக்குவித்து பல பயனுள்ள புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரும் விதத்தில் இரண்டு சிறந்த ஊரக கண்டுபிடிப்பாளர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. 2022-2023ம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மற்றும் விதிமுறைகள் அறிவியல் நகர இணையதளம் www.sciencecitychennai.in-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அறிவியல் நகரத்திற்கு 30.08.2023 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

The post ஊரக கண்டுபிடிப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,City of Science ,City ,of Science ,Tamil Nadu ,
× RELATED சென்னை மாநகரில் சீரான மின்விநியோகம்...