சென்னை: பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை கைவிடக் கோரி சட்ட ஆணையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பன்முகத் தன்மையை கொண்ட இந்தியாவின் முன்னேற்றத்துக்கும், ஒற்றுமைக்கும் பொது சிவில் சட்டம் ஊறு விளைவிக்கும். பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன்வைக்கிறது. சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளுக்கு சவால் விடுவதாக பொது சிவில் சட்டம் உள்ளது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக பொது சிவில் சட்டம் உள்ளது என்று கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
The post பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை கைவிடக் கோரி சட்ட ஆணையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!! appeared first on Dinakaran.