×

சின்னத்திரை நடிகை, பாஜக பிரமுகர் வீட்டில் கொள்ளை: 2 பேர் கைது; டிவி, கார் பறிமுதல்

பூந்தமல்லி: சின்னத்திரை நடிகை, பாஜக பிரமுகர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து டிவி, கார் பறிமுதல் செய்யப்பட்டது. பெரிய அளவிலான டிவியை கொண்டு செல்ல காரை திருடியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மதுரவாயல் கிருஷ்ணாநகர் 15வது தெரு பகுதியில் பிரபல சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான நடிகர் ராஜ்கமல், நடிகை லதா ராவ் ஆகியோருக்கு சொந்தமான சூட்டிங் பங்களா உள்ளது. கடந்த 9ம் தேதி இந்த பங்களா வீட்டில் லட்ச ரூபாய் மதிப்பிலான டிவி, மோட்டார் பம்ப் திருடு போனது. இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதுபோல் இவர்களின் வீட்டுக்கு பக்கத்து வீடான பாஜக பிரமுகர் பொன்.பிரபாகர் என்பவர் வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது காரும் திருடு போனது.இதுகுறித்து பொன்.பிரபாகர் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து விசாரித்து வந்த நிலையில், சென்னை பிராட்வே கொண்டிதோப்பு பகுதியை சேர்ந்த காஜா மொய்தீன் (38), திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த அமீன் உதீன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து திருடப்பட்ட டிவி, கார் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சின்னத்திரை நடிகையின் பங்களா வீடு என்பதால் அதிகளவில் பொருட்கள் கிடைக்கும் என நினைத்து திருட வந்தவர்களுக்கு டிவி மட்டுமே கிடைத்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பெரிய அளவிலான டிவியை திருடி எடுத்து செல்ல வாகனம் இல்லாததால் பாஜக பிரமுகர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த காரையும் திருடி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சின்னத்திரை நடிகை, பாஜக பிரமுகர் வீட்டில் கொள்ளை: 2 பேர் கைது; டிவி, கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Poontamalli ,
× RELATED பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை...