×

தூய்மை பணியாளர்கள் சாலைமறியல் போராட்டம்

 

விருதுநகர், ஜூலை 13: விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் 60 பேர் கைது செய்யப்பட்டனர். தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணை உத்தரவை திரும்ப பெற வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்கின்ற அனைத்து பிரிவு ஒப்பந்த ஊழியர்களையும் சட்டப்படி பணிநிரந்தரம் செய்திட வேண்டும், கொரோனா பேரிடர் காலங்களில் முன்களப்பணியாளர்களாக பணி செய்த தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை ரூ.15,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.

சிஐடியு நகர கன்வினர் பாலமுருகன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். நகர துணைத் தலைவர் பால்ராஜா தலைமை வகித்தார். நிர்வாகிகள் சங்கர், மூர்த்தி, கருப்பசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தேவா, துணைச் செயலாளர் முருகன், பொருளாளர் செல்லச்சாமி, நகர கன்வீனர் பழனி பேசினர். தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையட்டு மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். இதேபோல் ராஜபாளையம் காந்தி சிலை மற்றும் சேத்தூர் பேருந்து நிலையம் எதிரே சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 80 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

The post தூய்மை பணியாளர்கள் சாலைமறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...