×

தஞ்சாவூர் பகுதியில் சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு

 

தஞ்சாவூர், ஜூலை 13: தஞ்சாவூர் பகுதியில் சட்டமன்ற மனுக்கள் ஆய்வு குழு உறுப்பினர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சாவூர் பகுதியில் சட்டமன்ற மனுக்கள் ஆய்வு குழு உறுப்பினர் தலைமை அரசு கொறடா கோவி செழியன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் மாரியம்மன் கோவில் காடவராயன் குளம், சமுத்திரம் ஏரி, நாஞ்சிக்கோட்டை பகுதியில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், அண்ணா நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, புதிய பேருந்து நிலையம் கழிவறை, திருவையாறு புறவழிச்சாலை, வேலூர் கிராமத்தில் இலவச கழிப்பிடம் பழுதுபார்ப்பு, தஞ்சை பெரிய கோயில் அகழி சுத்தப்படுத்துதல் போன்ற மனுக்கள் மீது ஆய்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் செ.சுந்தரராஜன், பாபு, கே.பொன்னுசாமி, ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் கி.சீனிவாசன், சட்டமன்ற பேரவை துணை சயலாளர் கோ.கணேசன், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தஞ்சாவூர சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா.புண்ணியமூர்த்தி, மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post தஞ்சாவூர் பகுதியில் சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thanjavur Area Legislative Petitions Committee ,Thanjavur ,Legislative Petition Scrutiny Committee ,Thanjavur… ,Thanjavur Area Assembly Petitions Committee ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...