- இலக்கிய மன்றம்
- காடுவெட்டி
- அரசு
- பள்ளி
- முத்துபேட்டை
- இலக்கிய அமைப்பு
- கர்பகநாதகுலம்
- கடுவேட்டி ஊராட்சி ஒன்றியம்
- நடுத்தரப் பள்ளி
- முத்துப்பேட்டை
- இலக்கிய மன்றத்தின் தொடக்கப்பள்ளி
- கடுவெட்டி அரசு பள்ளி
- தின மலர்
முத்துப்பேட்டை, ஜூலை 13: முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நாட்டுக்கு உழைத்த நல்லோர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பட்டதாரி ஆசிரியர் உமாராணி, ஆசிரியர்கள் முருகையன், பொற்செல்வி, அன்புச்செல்வி கோகிலசந்திரன் மற்றும் பாமா ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினர். முன்னதாக இலக்கிய மன்ற பொறுப்பாசிரியர் அருளானந்தம் வரவேற்றார். முடிவில் ஆசிரியை சிந்துஜா நன்றி கூறினார்.
The post காடுவெட்டி அரசு பள்ளியில் இலக்கிய மன்றத் தொடக்க விழா appeared first on Dinakaran.