×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவானவருக்கு வலை

மாதவரம், ஜூலை 13: சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தவரை மகளிர் போலீசார் தேடி வருகின்றனர். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், தனது இரண்டாவது பெண் குழந்தைக்கு 17 வயது ஆகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு புளியந்தோப்பு காந்திநகர் பகுதியில் வசித்த போது அங்கு குடியிருந்த தினேஷ் என்கிற குட்டி என்பவர் எனது மகளை அடிக்கடி ஆசைவார்த்தை கூறி வெளியே அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அங்கிருந்து வீட்டை காலி செய்துவிட்டு ஓட்டேரியில் உள்ள தங்கை வீட்டில் வசித்து வருகிறேன். மீண்டும் அந்த நபர் எனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்.

தான் கூப்பிடும் இடங்களுக்கு வரவில்லை என்றால் வீட்டுக்கு வந்து தகராறு செய்வதாகவும் மிரட்டுகிறார். எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியதில் புளியந்தோப்பு காந்தி நகர் 8வது தெருவை சேர்ந்த தினேஷ் என்கிற குட்டி என்பவர் தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவானவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Tamarind ,
× RELATED புழலில் பயன்பாடில்லாத வருவாய்த்துறை...