- திமுக
- முட்டம் காலா புனிதர்கள் கோவில்
- மாநில மீனவர் சங்கம்
- Kulachal
- Muttam
- மாநில மீனவர் சங்கம்
- தின மலர்
குளச்சல், ஜூலை 13: முட்டம் மீனவர் கிராமத்தில் சகல புனிதர்கள் ஆலயம் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த ஆலயத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆலய பராமரிப்பு பணிக்கு தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளரும், அகஸ்டின் மர்கத்தம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனருமாகிய ஏ.ஜோசப் ஸ்டாலின் ₹.10 லட்சம் அன்பளிப்பு வழங்க முன் வந்தார். இதையடுத்து அவர் முட்டம் ஆலயம் சென்று பங்குத்தந்தை கிறிஸ்டோ டாபினிடம் ₹10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சகாயராஜ், செயலாளர் ராஜ், உதவி செயலாளர் ஜாண் கென்னடி, பொருளாளர் டிலன், பங்கு பேரவை உறுப்பினர்கள், குமரி கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு இயக்குனர் டங்ஸ்டன், முட்டம் ஊராட்சி தி.மு.க. செயலாளர் அனனீயாஸ், குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மரிய ரூபன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜாண்சன், பனிக்குருசு உள்பட ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
The post முட்டம் சகல புனிதர்கள் ஆலய பராமரிப்பு பணிக்கு நிதி உதவி தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் வழங்கினார் appeared first on Dinakaran.