- ஊத்தி தமிழ்நாடு மாளிகை
- ஊத்தி
- ஊட்டி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- படிப்பு வீடு
- பிங்கர்போஸ்ட்
- தமிழ்
- தமிழ்நாடு
- வீட்டில்
- தின மலர்
ஊட்டி: ஊட்டியில் மாவட்ட கலெக்டரின் குடியிருப்பு, பிங்கர்போஸ்ட் அருகே தமிழகம் ஆய்வு மாளிகை அமைந்துள்ளது. இதன் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் மாண்டிரோசா காலனி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது. இதைப்பார்த்து, வீட்டின் மாடியில் இருந்த வளர்ப்பு நாய் குரைத்தது. மாடிக்கு சென்ற சிறுத்தை, நாயை வேட்டையாடி இழுத்து செல்ல முயன்றது. சத்தம் கேட்டு வெளியில் வந்த உரிமையாளர் கூச்சல் போடவே நாயை விட்டு விட்டு சிறுத்தை தப்பி ஓடி வனத்திற்குள் மறைந்தது. இருப்பினும், சிறுத்தை கடித்ததில் நாய் பரிதாபமாக இறந்தது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவலறிந்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
The post ஊட்டி தமிழகம் மாளிகை அருகே குடியிருப்பில் வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை appeared first on Dinakaran.